நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு; ஆடிப்போன நபர்!

நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு; ஆடிப்போன நபர்!

வர்த்தகர் ஒருவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மற்றுமொரு வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் வாதியான வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டார்.

நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு; ஆடிப்போன நபர்! | Harsh Order Issued By The Court To The Betrayerஅதோடு முறைப்பாட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளியான நபர் சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரமொன்றை விற்பனை செய்து அந்தப் பணத்தை தனக்கு வழங்கவில்லை என மற்றொரு வர்த்தகர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.