பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

பளையில் உள்ள புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

இச்சம்பவம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இன்றைய தினம் (29-11-2023) இடம்பெற்றுள்ளது.

பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Motorcycles Collide Head On Youth Died Pallai

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பளை நகர பகுதியிலிருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Motorcycles Collide Head On Youth Died Pallai

இச்சம்பவத்தில் பளை நகரம் பளையை சேர்ந்த 20 வயதான குணம் கணேசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.