
தாய்வானில் இருக்கும் காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்...! எதற்காக கட்டப்பட்டது தெரியுமா...
தாய்வானில் காலணி போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் கண்ணாடி தேவாலயம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தாய்வானின் சியாயி கவுண்டியில் அமைந்துள்ள இந்த கண்ணாடி கட்டிடம் ஒரு சர்ச். சர்ச் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று எண்ண வேண்டாம், இந்த தேவாலயம் வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது.
மாறாக திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆலயத்திற்குள் காதலர்களுக்கான நாற்காலிகள், பிஸ்கட்கள் மற்றும் கேக்குகள் போன்ற என விஷயங்கள் இருக்குமாம்.
ஹை-ஹீல் ஷூ போன்ற வடிவில் இருக்கும் இந்த தேவாயலம் 320க்கும் மேற்பட்ட நிறமுள்ள கண்ணாடி பேனல்களால் ஆனது. இதனை உருவாக்க US$686,000 செலவாகியுள்ளதாம் இந்த தேவாலயம் கட்டப்பட்மையின் பின்னணி தொடர்பான முழுமையான விபரங்களை இந்த கானொளியில் காணலாம்.