
வெளிநாடொன்றில் உறங்கிகொண்டிருந்த இலங்கையரை கொலை செய்த நபர்! அதிர்ச்சி சம்பவம்.
தென்கொரிய நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் கடந்த 03-12-2023 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான பி.கே.ஷெனித் துலாஜ் சதுரங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுளார்.
மேலும், சதுரங்காவை கத்தியால் குத்திய மற்றொரு இலங்கையர் உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை பக்கத்து அறையில் இருந்த மற்றுமொரு இலங்கையரால் குத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.