யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்!

யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்!

  யாழ்.மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடைத் தொகுதி தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்தால் கடைத் தொகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாக்கி உள்ளன.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்! | Shop Blocks On Fire In Jaffnaமின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.

யாழில் தீக்கிரையாகிய கடைத்தொகுதிகள்! | Shop Blocks On Fire In Jaffnaகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.