சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி.

சீனாவில் நேற்றிரவு (18) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் வடமேற்கு பகுதியின் கன்சு மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை கிங்காய் மாகாணத்தில் சுமார் 11பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : நூறுக்கும் மேற்பட்டோர் பலி | More 110 People Killed After Earthquake In China

இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவுக்கு அமைய இன்று காலை முதல் மீட்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள காணொளிகளில் வீடுகளின் கூரை பெயர்ந்து விழுந்த நிலையிலும், இடிந்து சேதமடைந்த நிலையிலும் காட்சிகள் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.