தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்: யாழில் சம்பவம்..!

தனிமையில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்: யாழில் சம்பவம்..!

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவரும் மூதாட்டியின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டுக்குச் சென்ற சில சந்தேக நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

jaffna police

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.