
யாழ்ப்பாண சிறையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ள 16 கைதிகள்..!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 16 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி குறித்த கைதிகள் நாளையதினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் 1004 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதிபருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நத்தார் தினத்திற்காக சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க காவல்துறை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.