யாழ் பல்கலை மாணவி மரணத்தால் வெடித்த சர்ச்சை.

யாழ் பல்கலை மாணவி மரணத்தால் வெடித்த சர்ச்சை.

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி, குணரத்தினம் சுபீனா மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ் பல்கலை மாணவி மரணத்தால் வெடித்த சர்ச்சை | Jaffna University Student Subina Parentalcomplaintஇந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி கடந்த 23ம் திகதி உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாற்றியனுப்பப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இதன்போது மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியை நேற்று(25) இடம்பெற்ற நிலையில், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் குடும்பத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.