
வெளிநாடொன்றில் தாயுடன் சடலமாக மீட்கப்பட்ட நான்கு குழந்தைகள்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அத்தோடு, 09 மாதங்கள் முதல் 10 வயது வரையான நான்கு குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள