யாழில் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன்.

யாழில் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன்.

யாழ் - கொடிகாமம் பகுதியில் கடந்த மாதம் மாவீரர் தினத்தில்  மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய புகைப்படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் - கொடிகாமம் பகுதியைச்  சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவர் கடந்த  ( 28.11.2023) ஆம் திகதி இடம்பெற்ற மாவீரர் தினத்தன்று  புலிச் சின்னம் மற்றும் பிரபாகரனின் படம் பொறித்த ஆடையுடன் தோன்றியமைக்காகப்  கைது செய்யப்பட்டிருந்தார்.

சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றைய தினம் (27.12.2023)   இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழில் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன் | Bail For Youth Arrested On Heroes Day In Jaffna

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து  நேற்றைய தினம்  (27.12.2023)  நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தருணத்தில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவர் கடந்த மாவீரர் தினத்தன்று புலிச் சின்னம் மற்றும் பிரபாகரனின் படம் பொறித்த ஆடையுடன் தோன்றியமைக்காகப் நவம்பர் 28ம் திகதி கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.