யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை.

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை.

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் இன்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.இந்நிலையில், இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை | Robbing By Fack Account On Facebook

சம்பவம் தொடர்பாக திருகோணமலை வாசி நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.அதன் பின்னர், விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டனர்.

யாழில் பெண் போல பேசி ஆயுத முனையில் கொள்ளை | Robbing By Fack Account On Facebook

மேலும், சந்தேக நபர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.