யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு..!

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு..!

யாழ்ப்பாணத்தில் தந்தை தனக்கு பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (29.12.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் இளைஞன் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

தந்தை தனக்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றையதினம் (29) குறித்த இளைஞன் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு | A Boy Suicide In Jaffna

இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றைய தினம்(30) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.