யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள்  கவனயீர்ப்பு போராட்டம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று (18.01.2024) கவனயீர்ப்பு போராட்டம் நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்று கூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம்,பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாடு முழுவதிலும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் த.சிவரூபன் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் கடந்த 14ஆம் 15ஆம் திகதிகளில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை  கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா பணியாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.