சிறப்பாக நடந்த மாவிட்டபுரம் திருமஞ்ச வெள்ளோட்டம்

சிறப்பாக நடந்த மாவிட்டபுரம் திருமஞ்ச வெள்ளோட்டம்

மாவிட்டபுரம்‌ ஸ்ரீ கந்தசுவாமி கோவிவில்‌ புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம்‌ கொண்ட திருமஞ்சம்‌ வெள்ளோட்டம்‌ இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

நாளை வியாழக்கிழமை (25.01.2024) தைப்பூசத்‌ திருநாளன்று மாலை 2.30 மணிக்கு பால்குட பவனி நடைபெற்று மாலை 3 மணிக்கு அபிஷேகம்‌ பூசைகள்‌ இடம்பெற்று மாலை 6 மணிக்கு வசந்தமண்டப பூசை.இலட்சார்ச்சணை பூர்த்தியாகி புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற திருமஞ்சத்தில்‌ பவனி வருவார்‌.

முருகப்பெருமான்‌ அடியார்கள்‌ அனைவரும்‌ ஆலயத்திற்கு வருகைதந்து மாவைக்கந்தனின்‌ திருமஞ்சத்தின்‌ வடம்‌ பிடித்து இஷ்டசித்திகளும்‌ பெற்று சுகவாழ்வு வாழ ஆதீனகர்த்தா அழைப்பு விடுத்தார்‌.