யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி.!

யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி.!

யாழில் இளைஞர் ஒருவருக்கு காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது  கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன், யாழ்ப்பாணம் - கீரிமலைப் பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளதுடன் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டதால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்,  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி | A Youth Died Unconsciousness In Jaffnaமேலும், இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.