யாழில் மதுபோதையில் குடும்பஸ்தர் செய்த செயல்; அச்சத்தில் கதறிய குழந்தைகள்

யாழில் மதுபோதையில் குடும்பஸ்தர் செய்த செயல்; அச்சத்தில் கதறிய குழந்தைகள்

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினரால் மீட்டு கரை சேர்த்துள்ள சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை (27) பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்துள்ளார் மயிலிட்டி கடல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது 2 வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.

யாழில் மதுபோதையில் குடும்பஸ்தர் செய்த செயல்; அச்சத்தில் கதறிய குழந்தைகள் | The Family S Act Of Drunkenness In Jaffna

அதன் போது , படகினுள் கடற்தண்ணீர் உட்புகுந்ததுடன் , படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர்.

இதன்போது கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கவனித்த நிலையில் விரைந்து , படகில் இருந்து பிள்ளைகளை மீட்டுள்ளதுடன் , படகினை கரைக்கு செலுத்துமாறு கூறி கரை சேர்ந்த பின்னர் குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்துள்ளனர்.