யாழில் மீன்பிடிக்க சென்ற இளைஞன் மாயம்

யாழில் மீன்பிடிக்க சென்ற இளைஞன் மாயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இச் சம்பவத்தில் அப் பகுதியைச்  சேர்ந்த ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் (வயது 32) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

 குறித்த இளைஞன் மேலும் இருவருடன் குருநகரிலிருந்து படகில் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார்.

கடலில் படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரவு மூவரும் படகினுள் நித்திரைக்குச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது அதில் இருந்த இளைஞன்  காணாமல் போயுள்ளார்.  

யாழில் மீன்பிடிக்க சென்ற இளைஞன் மாயம் | Jaffna Fisherman Missing

அதனையடுத்து, இருவரும் கடலில் தேடி இளைஞரை காணாத நிலையில், கரை திரும்பி ஏனைய கடற்தொழிலாளர்களுக்கு அறிவித்து பின்னர், மேலதிக படகுகளுடன் கடற்றொழிலாளர்கள் கடலில் சென்று தேடியும், இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

 இந்நிலையில் இளைஞர் காணாமல்போன விடயம் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்துறை, காவல்துறையினர், கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.