
யாழில் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள்
இந்தியக் கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
யாழ்ப்பாண பண்பாட்டு மையயத்தில் பெப்ரவரி முதலாம் திகதி மாலை 6 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் 75 - ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக யாழ் இந்திய துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இந்நடன நிகழ்வுகளின் வரிசையில் ஒடிசி,கதகளி, சத்ரியா மற்றும் மணிப்புரி முதலானவை இடம்பெறவுள்ளது.