
கொக்குவில் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்த கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடம் இன்றைய தினம் திங்கட்கிழமை (05 கல்வி அமைச்சர் சுசில் பிரேம இயந்தவால் திறந்து வைக்கப்பட்டது.
76 மில்லியன் ரூபாய் நிதிப்பங்களிப்பில் 2021 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட விஞ்ஞான. தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டது
பாடசாலை பதில் அதிபர் க.குமணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.