கச்சதீவு யாத்திரிகர்களுக்கான ஆறு முக்கிய அறிவித்தல்கள்

கச்சதீவு யாத்திரிகர்களுக்கான ஆறு முக்கிய அறிவித்தல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார்‌ ஆலய திருவிழாவானது இந்த வருடம்‌ யாழ்ப்பாண மாவட்டச்‌ செயலாளரின்‌ ஒருங்கிணைப்பின்‌ கீழ்‌ யாழ்‌ ஆயர்‌ இல்லம்‌, இலங்கை கடற்படை, நெருந்தீவு பிரதேச செயலகம்‌, மற்றும்‌ சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும்‌ முழுமையான ஒத்துழைப்புடன்‌ பெப்ரவரி 23 மற்றும்‌ 24 ம்‌ திகதிகளில்‌ நடைபெறவுள்ளது.

இந்நிலையில்‌ மேற்டி விடயம்‌ சர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால்‌ 6 முக்கிய விடயங்கள்‌ பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. 2024,02.23ம்‌ திகதி காலை 5 மணி தொடக்கம்‌ மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள்‌ மற்றும்‌ தனியார்‌ பேரூந்துகள்‌ யாழ்ப்பாணம்‌ பஸ்‌ நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான்‌ வரை சேவையில்‌ ஈடுபடும்‌.

2. கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான்‌.நயினாதீவு மற்றும்‌
நெடுந்‌தீவு ஆலய இறங்குதுறைகளில்‌ இருந்து 2024.02.23 ம்‌ திகதி காலை 5 மணி முதல்‌ நண்பகல்‌ 12 மணி வரை சேவையில்‌ ஈடுபடுத்தப்படும்‌.

3. குறிக்கட்டுவான்‌, நயினாதீவு மற்றும்‌ நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில்‌
இருந்து பயணிக்கும்‌ ஒரு நபருக்கான படஒற்குரிய ஒரு வழிப்‌ பயணக்‌ கட்டணம்‌ ரூ.1500 ஆகும்‌.

4. வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில்‌ திருவிழாவிற்கு.
செல்வோர்‌ தமது வதிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில்‌
தொடர்புகொண்டு உரிய கடற்பயணப்‌ பாதுகாப்பு அனுமதியினை
பெற்றுக்கொள்வதுடன்‌ படகுகளில்‌ பயணம்‌ செய்பவர்கள்‌ தனித்தனிப்‌ படகாக. பயணம்‌ செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில்‌
பயணிப்பதுடன்‌ 23 ம்‌ திகதி பிற்பகல்‌ 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை
வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும்‌.

5. கச்சதீவு உற்சவத்தில்‌ கலந்து கொள்ளும்‌ யாத்திரிகர்கள்‌ தங்களுக்கு
தேவையான உணவுமற்றும்‌ குடிநீர்‌ ஏற்பாடுகளுடன்‌ வருகைதருதல்‌ வேண்டும்‌.

6. கச்சதீவு புனித அந்தோனியார்‌ ஆலயமானது யாத்‌திரிகர்களின்‌ புனித
தலமாகவுள்ளதால்‌ மது பாவனைப்பொருட்கள்‌ கொண்டு செல்லுதல்‌ மற்றும்‌
பாவித்தல்‌ என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.