
யாழில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள்: இருவர் படுகாயம்.!!
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட, பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக வேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
|