
யாழ் உணவகமொன்றில் தோடம்பழச்சாறின் விலையை கேட்டு அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகமொன்றில் பழச்சாறை பருகியவர் அதன் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உணவகத்தில் ஒரு கோப்பை தோடம்பழச்சாறின் விலை ( Pure orange juice) 4000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலையை பற்றி விசாரிக்காமல் சாதாரண உணவக விலையாக இருக்கும் என்று நினைத்து இரண்டு தோடம்பழச்சாறு உள்ளிட்ட சில உணவுப்பொருள்களை சாப்பிட்ட புலம்பெயர் தமிழர் உள்ளிட்ட இருவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவை உண்ட பின்னர் பற்றுச்சீட்டை பார்த்தபோது இரண்டு தோடம்பழச்சாறுகளுக்கு 8000 ரூபாய் விலையை பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளனர். 800 ரூபாவையே 8000 என தவறாக கணித்து விட்டார்கள் என்று நினைத்து உணவக ஊழியரிடம் விசாரித்தபோதே 8000 ரூபாய் தான் விலை என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“நானும் பல உயர்தர நட்சத்திர உணவகங்களில் உணவருந்தியுள்ளேன். இவ்வாறு பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பதில்லை” என உடன் சென்றவருக்கு சொல்லி மனம் நொந்தாவாறே புலம்பெயர் தமிழர் பணத்தை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
இதேவேளை குறித்த உணவகத்தின் பற்றுச்சீட்டை பகிர்ந்து இவ்வளவு விலைக்கு உணவுப் பொருட்களை விற்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே அதனை வாங்க மாட்டார்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சில காலங்களுக்கு முன்னர் குறித்த உணவகத்தில் சுடு நீர் 100 ரூபாய், பால் தேநீர் 200 ரூபாய் என்பன சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.