யாழ். புத்தூரில் வீடொன்று தீக்கிரை..!

யாழ். புத்தூரில் வீடொன்று தீக்கிரை..!

யாழ்ப்பாணம் - புத்தூரில் உள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ். புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று இரவு 8.30 மணியளவில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம்பெற்றதாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து சிறுக சிறுக சேமித்து காணி வாங்குவதற்காக வைத்திருந்த 8 இலட்சம் ரூபா பணமும் தீயில் எரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பால் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் முற்று முழுதாக வீடு எரிந்து நாசமாகியுள்ளது.

யாழ். புத்தூரில் வீடொன்று தீக்கிரை | House Caught Fire In Putthur

இதற்கமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.