யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்..!

யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்..!

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(28) இடம்பெற்றுள்ளது.

மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்தியுள்ளார்.

இதன்போது இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனனும் குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நபர் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர் | Person Killed By Electrocution

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.