வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த காவல்துறையினரின் முச்சக்கர வண்டி!

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த காவல்துறையினரின் முச்சக்கர வண்டி!

யாழ்ப்பாணம்- கோப்பாய் காவல்துறையினரின்  முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்  இன்றையதினம்(13) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது  கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த காவல்துறையினரின் முச்சக்கர வண்டி! | A Police Tricyle Lost Control Of Speedகாவல்துறையினரே  இவ்வாறு அதிக வேகத்தில், ஆபத்தான விதத்தில் பயணம் செய்யும் நிலையில் பொதுமக்களை எவ்வாறு அவர்கள் நல்வழிப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

GalleryGallery