
யாழில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மாயம்..!
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார்.
மருதங்கேணி கடலில் இன்று (16/03/2024) அதிகாலை தொழிலுக்கு சென்ற அவர் இன்னும் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையோதிங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, காணமல் போனவர் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காணாமல் போனவரை தேடும்பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.