யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி :இரண்டு விபசார அழகிகள் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி :இரண்டு விபசார அழகிகள் சிக்கினர்!

யாழ்ப்பாணம்-இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில்  உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு விபசார அழகிகள் சிக்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் 18.03.2024 மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 42 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடுதியை ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே  பொறுப்பாக இருந்து நடாத்தி வருகின்றார் என தெரியவந்துள்ளது.

இந்த விடுதிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த அழகிகள் சுழற்சி முறையில் வருகை தருவதாகவும், இதனால் அங்கு கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில்,அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த இளவாலை காவல்துறையினர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.