உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..!

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை இன்று (19) முதல் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி  19ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 பரீட்சை நிலையங்களில் இந்த செயன்முறை பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த திகதி மற்றும் இடம் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.