யாழ் போதனா வைத்தியசாலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ் போதனா வைத்தியசாலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள்  கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதித்த போது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 இதன்போது கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! | One Arrested With Drug In Jaffna Teaching Hospitalசம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.