யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது..!

யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது.!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (23.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளார்.

யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது | Arrested Illegal Transportation Palm Trees Jaffna