
யாழ். சீமெந்து தொழிற்சாலை ஒன்றில் இரும்பு திருடியவர்கள் கைது!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (25.03.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.