யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ். சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குடும்பஸ்தரின் சடலம் இன்றையதினம் (31-03-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! | Family Man Body Recovered From A Well In Jaffna

கிணற்றிலிருந்து புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்துரை தவராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! | Family Man Body Recovered From A Well In Jaffna

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.