யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு...!

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு...!

யாழில் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. 

இச்சம்பவமானது நேற்றையதினம்(01)  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த தீவிபத்தில் தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, குறித்த வீடு தீயில் முற்றாக பாதிக்கப்பட்டதுடன் பல சொத்துகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.