நீதிமன்ற உத்தரவின் கீழ் யாழில் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்ட முக்கிய பொருள்!!

நீதிமன்ற உத்தரவின் கீழ் யாழில் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்ட முக்கிய பொருள்!!

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் வைத்து 18 கிலோகிராம் கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று (06) கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மன்னார் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாவித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கஞ்சாவினை கடத்த பயன்படுத்தப்பட்டிருந்த வானொலிப் பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் கீழ் யாழில் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா | Ganja Seized Successively In Jaffna Court Orderஇதேவேளை கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரியில் வைத்து 4 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களிடம் காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சாவினை செம்மணி மற்றும் மன்னார் பகுதியில் காவல்துறையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.