பிரபல நடிகையின் 97 கோடி சொத்து முடக்கம்; அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்

பிரபல நடிகையின் 97 கோடி சொத்து முடக்கம்; அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிட்காயின் மோசடி தொடர்பிலேயே ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

வேரியபில் டெக் நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய், விவேக் மற்றும் சிம்பி பரத்வாஜ் உள்ளிட்ட ஏஜென்ட்டுகள் மீது டெல்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது.

பிரபல நடிகையின் 97 கோடி சொத்து முடக்கம்; அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள் | Shilpa Shetty S 97 Crore Assets Bitcoin Fraudவிசாரணையில் உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா, 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக தெரியவந்தது. இன்னும் அந்த பிட்காயின் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் மதிப்பு மட்டும் 150 கோடி ரூபாய் என்று அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தி இருக்கிறது.

பிரபல நடிகையின் 97 கோடி சொத்து முடக்கம்; அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள் | Shilpa Shetty S 97 Crore Assets Bitcoin Fraud

அதன் ஒரு பகுதியாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், பிட்காயின் மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திரைப்பிரபலங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.