யாழில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறீவரதன் சஞ்சிதன் என்ற வயது 22 வயதுடைய இளைஞனே இன்று அதிகாலை 12.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | Fate Young Man Who Went Girlfriend S House Jaffna

குறித்த இளைஞன் அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினமே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.