யாழில் ஆலயத்திற்கு சொந்தமான மரத்தினை வெட்ட முயன்ற நபர் பலி

யாழில் ஆலயத்திற்கு சொந்தமான மரத்தினை வெட்ட முயன்ற நபர் பலி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆலயத்திற்கு சொந்தமான மரமொன்றினை வெட்ட முயற்சித்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி கலாசாலை வீதியை சேர்ந்த 62 வயதான ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரான செல்லமுத்து சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், புத்தூர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சொந்தமான மரம் ஒன்றினை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியவேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

அதனையடுத்து, அவரை மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் ஆலயத்திற்கு சொந்தமான மரத்தினை வெட்ட முயன்ற நபர் பலி | A Man Died Who Tried To Cut The Kovil Treeஇந்நிலையில், சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.