யாழில் அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நேற்றையதினம் (08.05.2024) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு | Family Members Die Due To Extreme Heat In Yaliநேற்று பிற்பகல் தந்தை வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்த மகள் அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. மேலும் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.