யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு! | Man Was Chased By The Police Jaffna Died Electric

குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்.

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு! | Man Was Chased By The Police Jaffna Died Electric

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.