
யாழில் ஆபத்தான முறையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய மாணவர்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளனர்.
ஒருவர் துவிச்சக்கர வண்டியின் ஆசனத்தில் அமந்திருக்க, மற்றையவர் துவிச்சக்கர வண்டியின் கைப்பிடியில் (handle) அமர்ந்திருந்தவாறு பயணம் செய்துள்ளனர்.
நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருவதோடு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் துவிச்சக்கர வண்டியினை செலுத்தியுள்ளமை பலருடைய கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.