யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம்(jaffna)-உடுவில் பகுதியில் தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அனர்த்தமானது நேற்று(10) உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இடம்பெற்றது.

 யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் நேற்று  (10) உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பொழிந்துள்ளது. 

இதன்போது, மின்னல் தாக்கத்தால் வீடொன்றில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளதோடு, நபர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற அனர்த்தம்:ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி | One Injured In Lightning Strike In Jaffnaஇந்நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.