யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

யாழில் திடீரென சுகயீனமுற்று அவதிப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் சந்தையில் நீண்டகாலமாக மரக்கறி வியாபாரம் செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு | Sudden Death Of Young Family In Yali

நேற்றைய தினம் (23) வியாழக்கிழமை மாலை வீட்டில் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் .சாவகச்சேரி மந்துவில் பகுதியைச் சேர்ந்த கணேஸ் செந்தூர்செல்வன் வயது 47 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை உயிரிழந்தவர் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பச்தரின் திடீர் உயிரிழப்பு அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.