யாழில் இடம்பெற்ற கோர விபத்து: நால்வர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: நால்வர் படுகாயம்

யாழ்பாணத்தில் (Jaffna) கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் A9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது, கனரக வாகனம் பின்னால் திருப்ப முற்பட்டவேளையில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: நால்வர் படுகாயம் | Today Accident In Jaffna Four People Injuredஅதன்படி, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.யாழில் இடம்பெற்ற கோர விபத்து: நால்வர் படுகாயம் | Today Accident In Jaffna Four People Injured

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: நால்வர் படுகாயம் | Today Accident In Jaffna Four People Injured