குழு மோதலில் தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்

குழு மோதலில் தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்

 இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கல்கிரியாகம, பண்டாரபொத்தானையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குழு மோதலில் தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம் | Father Killed Son Seriously Injured Group Clash

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகத் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் 

சம்பவத்தில் நவுறு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன் மோதலில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.