போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு காவல்துறையிடம் சரணடைந்த தாய் : யாழில் சம்பவம்

போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு காவல்துறையிடம் சரணடைந்த தாய் : யாழில் சம்பவம்

யாழில் (Jaffna), போதைக்கு அடிமையான மகனை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு காவல்துறையினரிடம் கோரியுள்ளார்.

குறித்த தாயார் கோரியதையடுத்து இளைஞனை கைது செய்த காவல்துறையினர் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்

இதனை அடுத்து நேற்று(03), நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு  இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.