யாழில் ஆலய உப தலைவர் மீது வாள்வெட்டு

யாழில் ஆலய உப தலைவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் - அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலொன்று கோடரியினால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

யாழில் ஆலய உப தலைவர் மீது வாள்வெட்டு | A Sword Cut On The Deputy Head Temple In Yali

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.