யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மணல்காட்டில் 31 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது இன்று(08.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மணல்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 31 வயதானவரே இவ்வாறு பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சந்தேகநபரை சட்டநடவடிக்கைக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது | A Person Was Arrested With Ganja In Jaffna