எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றம்

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றம்

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் | Today Weather In Sri Lanka To Tamil Peoples Northeமேலும், வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் | Today Weather In Sri Lanka To Tamil Peoples Northeமத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்கிளிடம் கோரியுள்ளது.