யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (09) மாலை யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 25, 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் | Man Arrested With 1000 Drugs And Swords In Jaffna

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் நாளை (10) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.